Saturday 16th of February 2019


Saturday 16th of February 2019
ஓட்டுநர் உரிமம் உட்பட அனைத்து சேவைகளுக்கான கட்டணங் களையும் ஆன்லைனில் செலுத் தும் வசதியை தமிழக போக்கு வரத்து துறை நாளை தொடங்கு கிறது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 2012-ம் ஆண்டு முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் மற்றும் வரியை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணி களும் அதாவது பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல், தவணைக் கொள்முதல் மற்றும் தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய் யப்பட்டு அதற்கான கட்ட ணத்தை கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) மற்றும் பகுதி அலுவல கங்களில், ஓட்டுநர் உரிமம் சம்பந் தப்பட்ட அனைத்துப் பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப் பிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, விண்ணப்பதாரர் அதற்குரிய கட்டணத்தை மட்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்துக்கு நேரடியாக சென்று செலுத்தி வருகின்றனர். 1-ம் தேதி (நாளை) முதல் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளுக்கான, (அதாவது பழகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல்) கட்டணத்தை முழுவதுமாக மனுதாரர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து செயல்படுத்தும் வசதி போக்கு வரத்து துறை அமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தொகை..
மனுதாரர்கள் நேரடியாக https://parivahan.gov.in/parivahan/ இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி பயன் பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மனுவை பூர்த்தி செய்த பிறகு, அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு மூலமாக விண்ணப் பத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை இணையதளம் மூலமாக செலுத்தலாம். அல்லது ரசீதை உருவாக்கி அதை அருகி லுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டு அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்று தகுந்த டெஸ்ட்டில் கலந்து கொண்டு, புகைப்படம் எடுத்து உரிமத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
காத்திருக்க தேவையில்லை
இதன் மூலம், பொதுமக்கள் அலுவலகங்களில் காத்திருப்பதும் குறைக்கப்படுகிறது. மேலும், அவர்கள் இருப்பிடத்திலிருந்தே மனு செய்தால் 24 மணி நேரமும் வங்கி வழியாக பணம் செலுத்து வதன் மூலம், பொதுமக்களுக்கு மிகவும் சுலபமாக அவர்களுடைய ஓய்வு நேரத்திலே கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.